செங்கம் நடுகற்கள்: அறிமுகம்
சமூகத்துகாகவோ, குடும்பத்துக்காகவோ, நீதி பிழைத்ததாலோ உயிர் விட்டவர்கள் நினைவாக வழிபடும் நோக்குடன் நிறுவப்பட்ட இறந்தவர்களின் சிற்பத்தை உடைய கற்கள் நடுகற்கள் எனப்படுகின்றன. நடுகற்கள் இருவகை; சிற்பம் மட்டுமே உடையது. சிற்பமும் தொடர்புடைய கல்வெட்டும் உடையது. பெரும்பாலும் இரண்டாம் வகை நடுகற்களே தொல்லியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்படுள்ளன. இவ்வாறு ஆவணப்படுத்த நடுகற்கள் தமிழகத்தில் 320 ஆந்திர பிரதேசத்தில் 476 கர்நாடகத்தில் 7 உள்ளன* தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் 80% திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ளன. இவை தென் பெண்ணையாறு, செய்யாறு. பாலாறு நதிகளை ஒட்டிய பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களை அடுத்த கர்நாடக மாநிலத்தின் கோலார், மைசூர் மாவட்டங்களிலும் ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர், சித்தூர், கடப்பை, ராயலசீமா மாவட்டங்களை உள்ளடக்கிய ராயலசீமா பகுதியிலும் நடுகற்கள் அதிகம் உள்ளன. நடுகற்களில் காணப்படும் கல்வெட்டுகள் தமிழ் வட்டெழுத்துகளின் வளர்ச்சி, மொழிநடை ஆகியவற்றை அறியவும், சிற்பங்கள் வெவ்வேறு காலங்களில் வீரர்களின் உருவம், உடை, ஆயுதங்கள