கணிகிலுப்பை
சிறப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் புத்தர் சிலை பயணம் இரண்டு நாள் திருவண்ணாமலை - சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள் -26/08/2019) செய்யாறிலிருந்து பயணத்தைத் தொடங்கினேன். சென்ற முதல் இடம் கனிகிலுப்பை. செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் செய்யாறை அடுத்து சில கிமீ மோசமாக இருந்தது. தார் சாலையே இல்லாமல் ஜல்லி சாலையாக இருந்தது. வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை அடைந்து சிறிது தூரத்தில் நரசமங்கலம் அருகில் வலது புறம் பிரியும் ஒற்றைச் சாலையில் பயணம் செய்து புத்தர் வீற்றிருக்கும் பிள்ளையார் கோயிலை அடைந்தேன். கணிகிலுப்பை விநாயகர் கோயில் புத்தர் சிலை ஆலயத்தின் முன் இறக்கப்பட்டுள்ள தாழ்வாரத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கணிகிலுப்பை புத்தர் மூன்று சிங்கங்களால் தாங்கப்படும் ஆசனத்தின் மீது அரைத் தாமரை இருக்கையில் (அர்த்த பத்மாசானம்) அமர்ந்திருக்கிறார் புத்தர். ஆசனத்தின் முதுகுப்புறம் இரு பக்கங்களிலும் மேலுமாக மூன்று சட்டங்களால் அணைக்கப்பட்டு நீள திண்டு ஒன்றை கொண்டுள்ளது. ஆசனத்தின் உயரம் அவரது நெ