நரசமங்கலம்-மாமண்டூர் குடைவரைகள்
முதலாம் சிறப்பு நான்கு மகேந்திரர் பாணி குடைவரைக் கோயில்கள். தமிழகத்தில் ஒரே மலைத்தொடரில் நான்கு குடைவரைகள் அமைந்திருப்பது. மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிகப் பெரிய குடைவரைகளுள் ஒன்று. மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் மிக அதிகக் கருவறைகள் கொண்ட குடைவரை. மூன்றாம் குடைவரை தமிழகக் குடைவரைகளில் இரு பக்க முகப்பு கொண்ட ஒரே குடைவரை. பயணம் இரண்டு நாள் திருவண்ணாமலை - சேத்துப்பட்டு - வந்தவாசி - செய்யாறு பயணத்தின் இரண்டாவது நாள் (விகாரி ஆண்டு ஆவணி மாதம் 9 ஆம் நாள் (26/08/2019) கணிகிலுப்பையைப் பார்ததுவிட்டு மதியம் மாமண்டூர் வந்தேன்.. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 105 கிமீ தூரம். வந்தவாசி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து சுமார் 30 கிமீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரத்திலும் உள்ளது நரசமங்கலம் என்ற ஊர். அங்கிருந்து சாலையிலிருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ளன குடைவரைகள். சாலை பிரியும் இடத்தில் பச்சையம்மன் கோயில் வளைவு ஒன்று உள்ளது. குடைவரைகள் இந்திய தொல்லியல் ஆய்வகத்தால் பராமரிக்கப்படுகிறது. வளாகத்தின் வாயிலில் இருந்து