செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில்
அமைவிடம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தின் தலைநகர் செங்கம். செய்யாற்றின் தென்கரையில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக 33 கிமீ தூரம். இலக்கியத்தில் செங்கம் மலைபடுகடாம் பத்துப்பாட்டு எனும் சங்க காலத் தொகுப்பில் உள்ள பத்தாவது நூல். ஒரு ஆற்றுப்படை நூல். ஆற்றுப்படை என்பது தலைவன் ஒருவனிடம் பரிசில் பெற்ற விறலியர், பாணர், கூத்தர், பொருனர் முதலியோருள் ஒரு கலைஞன் வேரொருவனுக்குத் அத்தலைவனது பெருமையைக் கூறி, அவன் ஊருக்குச் செல்லும் வழியைச் சொல்லி வழிகாட்டுவதாகும் (ஆற்றுப்படுத்துவது). மலைபடுகடாம் ' இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்' என்ற புலவர் 'பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்மா த்து வேள் நன்னன் சேய் நன்னன்' என்பவனைப் பாடியது. செங்கண்மா இன்றைய செங்கம். (இந்த நன்னன் சங்க இலக்கியங்கள் வசை பாடும் பெண்கொலை புரிந்த நன்னன் அல்ல). சங்க காலத்திற்குப் பின் செங்கம் குறிப்பிடத்தக்க தனி வரலாறு கொள்ளவில்லை. சிறப்பு சோழர் கால ரிஷபேசுவரர் கோயில் நாயக்கர் கால வேணுகோபால பார்த்தசாரதி கோயில் அதன் ராமாயண ஓவியங்கள் மகாவீரர் சிலை சுற்றியுள்ள இடங்கள