ஆதி திருவரங்கம் - தமிழகத்தின் மிகப் பெரிய பெருமாள்
சிறப்பு தமிழகத்தின் மிக நீளமான அரங்கன். அவருக்கு மூத்தவர். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இடையே நடை சாத்தப்படாமல் திறந்து இருக்கும் கோயில். பயணம் விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (20-09-19) அன்று ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன். தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். திருவண்ணாமலையிலிருந்து தெற்கே தென்பெண்ணையின் வடகரையில் மணலூர்பேட்டை - சுமார் 26 கிமீ தூரம்; திருக்கோவிலூரில் இருந்து சுமார் 15 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிமீ தூரம். மணலூர்பேட்டையில் இருந்து ஆற்றைப் பாலம் மீது கடந்து மேற்கே பிரிந்து ஆற்றின் தென்கரையை ஒட்டிச் செல்லும் சாலையில் சுமார் 5 கிமீ தூரத்தில் உள்ளது ஆதிதிருவரங்கம். ஆற்றின் வடகரையில் உள்ள ஜம்பைக்குச் சென்ற பிறகு ஆதிதிருவரங்கத்திற்குச் சென்றேன். கோயில் கோயில் இரு மதில் சுவர்கள் இரு கோபுரங்கள் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது. கோயில் வெளி மதில் கோயில் வெளி கோபுரம் - கிழக்கு நோக்கியது அடுத்த நாள் புரட்டாசி முதல் சனிக்கிழமை. பெரும் பக்தர் கூட்டத்தை முறைப்படுத்த, அன்னதானம் செய்ய ஏ