எண்ணாயிரம்
அமைவிடம் எண்ணாயிரம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம். விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாக செல்லலாம். விழுப்புரத்தில் இருந்து 20 கிமீ, செஞ்சியில் இருந்து 17 கிமீ தூரம். சென்னை - திருச்சி சாலையில் இருந்து கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 1068 பழம் கல்வெட்டுகளில் 'சிங்கபுரி' என்று அழைக்கப்படும் இன்றைய செஞ்சி, 'திண்டீசுரம்' என்ற திண்டிவனம், 'விஜயநிருபதுங்க செய்ந்தாங்கியச் சதுர்வேதி மங்கலம், ஜனநாதச் சதுர்வேதி மங்கலம், விழுப்பரையபுரம்' என்ற விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு இடையே உள்ள முக்கோண நிலப்பகுதி பல்லவர் காலம் காலம் முதலே சிறப்பு வாய்ந்ததாக இருந்துள்ளது. இந்த சிறு நிலப்பரப்பில் அருகருகே பல பல்லவர், சோழர் காலத்தில் எழுப்பப் பட்ட கோயில்களும், பிற்கால விரிவாக்கங்களும், கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. அவற்றுள் எண்ணாயிரம், எசாலம், பிரம்மதேசம், தாதாபுரம் ஆகிய ஊர்களில் சோழர் கோயில்கள் அமைந்துள்ளன. முதல் மூன்று அருகருகே மூன்று கி மீ