செங்கம் நடுகற்கள்: மேல் பள்ளிப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிப்பட்டு எனும் ஊரின் ஆனந்த வாடி என்ற காட்டில் உள்ள வேடியப்பன் கோவிலில் இருக்கும் நடுகல் கல்வெட்டு. (தொல். வே. அர., ) & (செங். நடு. 71/1978) ஸ்ரீ கோவிசைய பர (மேச்) சுவர பருமற்கு யாண்டு ஒன்பதாவது (வ-) மிறையார் வே ணாடிளக் கோவூர் நாட்டுக் கோஇல் பட்டர் வந் து தொறுக் கொண்ட நான்று மேற்செங்கை மாம்மு டைய பார தாயர் மக ன் தொறு மீ ட்டுப் ........... ன் முகன் கோயில் - அரண்மனை; பட்டன்(ர்) - உண்மையாளன்; நான்று - அப்போது எனக் குறிக்கும் ஞான்று; பாரம் - கவசம் (பிங்.); தா - வலிமை, தா+அன் > தாயன் - வலியோன் , தலைவன்; மகன் - படைஆள், வீரன்; மட்டான் - பட்டான், வீர சாவடைந்தான். முதலாம் பரமேச்சுர வர்மன் )பொ. யு. 668 - 669) இரண்டாம் மகேந்திர வர்மன் மகன், இரண்டாம் நரசிம்ம வர்மன் என்ற ராஜசிம்மன் தந்தை. அவனது ஒன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி.678) அவனுக்குக் கட்டுப்பட்டு அரி மிறையார் என்பவர் வேணாட்டை ஆண்டு கொண்டிருக்க அப்போது கோவூர் நாட்டு அரண்மனைக்கு உண்மையாளனாகிய (loyalist) படைஅதிகாரி வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது மேற்கு செ...